Wednesday, January 20, 2021

சேதாம்பல் - செவ்வல்லிப்பூ

 சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப்பூவை ஒத்த

சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து; 


1702.சேதாம்பல் போது அனைய
     செங் கனி வாய் வெண் தளவப்
போது ஆம் பல் தோன்ற,
     புணர் முலைமேல் பூந் தரளம்
மா தாம்பு அற்றென்ன
     மழைக் கண்ணீர் ஆலி உக,
நா தாம் பற்றா மழலை
     நங்கைமார் ஏங்கினார்.

     நாதாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப்
பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்;
சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப்பூவை ஒத்த
சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து;  வெண் தளவப் போதுஆம்பல்
தோன்ற 
- வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித்
தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்தமார்பகங்களின் மேல்;
மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த்துளி; பூந்தரளம்-
அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்தகயிறுஅறுந்து
ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார்-
அழுதார்கள்.