Sunday, January 6, 2019

மராஅம் (மரம்)

மராஅம் (மரம்)

மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர். இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்த செய்தி நமக்குத் தெரியும்.
மராஅம் மலர்
மராஅம் பூவின் நிறம் வெள்ளை. [1]
சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும். [2]
பலராமன் போல் வெண்ணிறம் கொண்டது. [3]
மணம் மிக்கது. [4]
பூ வலமாகச் சுழன்றிருக்கும். [5]
குராலொடு மராஅம் ஊர்த்தெருவில் ஓங்கிப் பூக்கும். [6]
பயன்பாடு
குவித்து விளையாடும் பூ. [7]
கூந்தலில் சூடும் பூ. [8]
மகளிர் கூந்தலில் பாதிரி, அதிரல் ஆகிய பூக்களோடு மராஅம் பூவையும் அடைச்சிக்கொள்வர் (சடைவில்லை ஆக்கிச் செருகிக்கொள்வர்). [9]
கானவன் மராஅம் மரத்தில் ஏறிக்கொண்டு யானைமேல் வேல் எறிவான். [10]
பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது. [11]
கொற்றவை உகந்த மலர். அதிரல், பாதிரி, மராஅம் மலர்கள் அணங்கு (கொற்றவை) மேல் உதிர்ந்து அவளைப் பராவும் (துதிபாடும்). [12]
ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர். [13]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்
கடம்பு மரம்

அடிக்குறிப்பு

  1.  வால் வீ செறிந்த மராஅம் - மணிமேகலை 19-76
  2.  சுதை விரித்து அன்ன பல்பூ மராஅம் - அகநானூறு 211-2
  3.  ஒருகுழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅம் - கலித்தொகை 26-1
  4.  மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல் - அகநானூறு 21-12
  5.  வலஞ்சுரி மராஅம் வேய்ந்த நம் மணம் கமழ் தண்பொழில் - ஐங்குறுநூறு 348
  6.  அகநானூறு 265-20
  7.  குறிஞ்சிப்பாட்டு 85
  8.  தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் - நற்றிணை 20
  9.  அகநானூறு 261-4
  10.  அகநானூறு 172-7
  11.  மராஅம் ஏறி ... பருந்து உயவும் என்றூழ் - அகநானூறு 81-8
  12.  அகநானூறு 99-8
  13.  நல்லவர் அணி நிற்ப, துறையும், ஆலமும், தொல்வலி மராஅமும், முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ. - கலித்தொகை 101

724.‘மரா மரம் இவை என
   வலிய தோளினான்;
“அரா
-அணை அமலன்” என்று
   அயிர்க்கும் ஆற்றலான்;
‘இராமன்’ என்பது பெயர்;
   இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்.
   பதி வந்து எய்தினான்;
 
(அந்தக்    குமரன்) இவை மராமரம் என-  மராமரம் என்னும்படி;
வலிய  தோளினான் 
-  வன்மையான  தோள்களையுடையவன்;
  அரா
அணை  அமலன்  என்று  
-  ஆதி சேடனாகிய படுக்கையில்  பள்ளி
கொள்ளும்   திருமால்தான்   அவதரித்தானோ  என்று;   அயிர்க்கும்
ஆற்றலான்   
-  ஐயுறக்  கூடிய  ஆற்றல்  படைத்தவன்;   பெயர் -
(அவனுக்கு)  அவனது  பெயர்;  இராமன் என்பது - இராமன் என்பது
(அவன்);  இளைய  கோவொடும்  - தம்பியான அரச  குமாரனோடும்;
பராவ   அரு   முனியொடும்  
-  அளவிட்டுப்  புகழ்வதற்கு  அரிய
முனிவனோடும்;  பதி  -  (நம்) நகரை;  வந்து  எய்தினான் -  வந்து
சேர்ந்தான்.
தசரதன்  மைந்தனான  இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும்
மிதிலை நகர்க்கு வந்தான்.                                   59




மரா மரம்

814.
நேர் ஒடுங்கல் இல் பகையினை
   நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன்
   சூழ்ச்சியே போல.
காரொடும் தொடர் கவட்டு எழில்.
   மராமரக் குவட்டை
வேரொடும் கொடு. கிரி என
   நடந்தது - ஓர் வேழம்.
 
ஓர் வேழம் - ஒரு யானையானது; நேர் ஒடுங்கல் இல் - நேராக
அடங்காத; பகையினை  -  பகைவரை; நீதியால் வெல்லும் - (அரச)
தந்திரத்தால்   வெல்லுகின்ற;    சோர்வு   இடம்பெறா   -   மனத்
தளர்ச்சியில்லாத; உணர்வினன் - நல்லுணர்வுடைய அரசனது; சூழ்ச்சி
போல
 - ஆலோசனை  போல;  காரொடும்  தொடர்  கவடு - மேக
மண்டலத்தை   அளாவும்  கிளைகளையுடைய;  எழில்  மராமரம்  -
அழகிய மராமரத்தின்; குவட்டை - அடிப்பகுதியை; வேரொடும் கொடு
-  வேரோடு பறித்துக்கொண்டு; 
 கிரிஎன  -  மலைபோல; நடந்தது -
நடந்து சென்றது.
கட்டிய     மரத்திலிருந்து    தன்னை    விடுவிக்க    எண்ணிய
யானையொன்று.  தன் சூழ்ச்சியால் அம் மரம்  முழுவதையும் வேரோடு
சாய்த்து  இழுத்துச்  சென்றது.  இது. தன்னைப் போரில் அகப்படுத்திய
பகைமன்னனிடமிருந்து விடுவிக்க  வேண்டித்  தந்திரத்தைக் கையாண்ட
தளராத ஊக்கமுடையவனது செயல் போன்றது. குவடு - ஆகுபெயர்.  2 

No comments:

Post a Comment