Tuesday, July 31, 2018

அசோகு - Saraca asoca (the ashoka tree; lit., "sorrow-less")


அசோகு அல்லது அசோகம் அல்லது ஆயில (Ashoka treeSaraca asoca) என்பது பபசியா குடும்பத்தைச் சேர்ந்த கசல்பினியோடே துணைக் குடும்பத் தாவரமாகும்.[1] இம் மரம் இந்திய துணைக் கண்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புபட்டது.

அசோக மரம் மழை அதிகம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. விந்திய மலை தொடரின் தெற்கு மத்திய பகுதிகளில் (ஆந்திர, கர்நாடக, நீலகிரி, மத்திய மேற்கு தொடர்ச்சி மலை) இவைகள் பரவிக் கிடக்கின்றன.
அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த இலைகள் , இனிய நாற்றம் உடைய மலர்கள், அசோக மரத்தின் சிறப்பு அம்சங்கள். எபோழுதும் பச்சை பசேல் என்று , சிறிய அடர்த்தியான இலைகளை கொண்டவை.
இதன் பூ பூக்கும் காலம் சுமார் (பிப்ரவரி முதல் அப்ரைல்). அசோக மலர்கள் கனமாகவும் கொத்து கொத்துதாக இருக்கும். இதன் நிறம் ஆரஞ்-மஞ்சள் , காயக்காய சிவப்பு நிறமாக மாறும்.
இவை காட்டு மரம், அனால் அழிந்து போகும் கட்டதில் உள்ளது. தான்தோணியாக தோன்றுவது அரிதாகவே உள்ளது.அனால் தனித்து நட்ட மரங்கள் இப்பவும் மத்திய, கிழக்கு ஹிமாலய அடிவாரத்தில் ,மற்றும் மும்பை வடக்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
சில சாதி(வகை) மரங்களே உள்ளன. ஒரு வகை, பெரிதாகவும் பரந்தும் இருக்கின்றன.
இன்னொரு வகைகையான குழாய் வடிவம் கொண்ட மரங்கள் அதிகமாக இப்பொழுது சாகுபடி செய்யபடுகின்றன.

மருத்துவ குணங்கள்

ரத்தபேதி, சீதபேதி, மாதவிலக்குக் கோளாறுகள் (வெள்ளைப்படுதல், மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி, மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு), சர்க்கரை நோய், பித்த நோய்கள், இரத்த அழுத்தம், கருப்பைக் கோளாறுகள் (அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள்), சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் குணமாக்கும்





866.
பின்னங்கள் உகிரின் செய்து.
   பிண்டி அம் தளிர்க் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி.
   தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற
   மணிஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன.
   அகன் சுனை குடைகின்றாரும்.
 
பிண்டி   அம்  தளிர் - அசோகின் அழகிய தளிர்களை; உகிரில்
பின்னங்கள்  செய்து  
-  (தம்)  நகங்களால்  சிறு சிறு துண்டுகளாகக்
கிள்ளி;   கைக் கொண்ட   சின்னங்கள்  -  கைக்  கொண்ட  அத்
துண்டுகளை;  முலையின்  அப்பி  -  தம்  தனங்களிலே அழகுபடப்
பொருத்தி;தேன்மலர்  -  தேனுடைய மலர்களை; கொய்கின்றாரும் -
பறிப்பவரும்;  வன்னங்கள்   பலவும் - பலவகையான வண்ணங்களும்;
தோன்ற  
-  தோன்றும்படி;  மணி  ஒளிர்  மலையின் - நவமணிகள்
விளங்கும்  மலையிலே;  நில்லா  அன்னங்கள்  -  நிலையாக இருந்த
வாழாத  அன்னங்கள்;   புகுந்த என்ன - (இப்போது) புகுந்தன என்று
(கண்டோர்)  கருதும்படி;   அகல்சுனை  -  பரவியுள்ள  சுனைகளிலே;
குடைகின்றாரும்  
-  (அச்   சேனையில்  உள்ள  மாதர்கள்)  மூழ்கிக்
குளிப்பவராயினர். 
தளிர்     முறிகளைத்  தம்  தனங்களில் அப்பி அலங்காரம் செய்து
கொள்வது  மகளிர்  இயல்பாம்.  மாதர்கள்  மலர் கொய்தலையும். சுனை
குடைதலையும்   செய்தனர்   என்பது.   அன்னப்  பறவை  மருதநிலக்
கருப்பொருளாதலால் ‘மலையின் நில்லா’ என்றார்.  

No comments:

Post a Comment