Thursday, August 9, 2018

வீழிப் பழம் / விழுதி



விழுதி அல்லது விளச்சி (lycheeLitchi chinensis) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.



May Be Kambar Can be discribed the lychee fruit in kamabaramayanam

956.
தாழ நின்ற ததை மலர்க் கையினால்.
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்.
தோழி கண்ணில். கடைக்கணிற் சொல்லினாள்.
 
ஆழி  மன்  ஒருவன் - ஆணைச் சக்கரம் செலுத்தவல்ல மன்னன்
ஒருவன்;  தாழ நின்ற  ததைமலர்க்  கையினால் - மிக நீண்டு நின்ற
இதழ்கள்   செறிந்த  தாமரை   மலர்   போன்ற  (தன்)  கைகளினால்;
உரைத்தான்  
-  (நாம்  எங்கே; எப்போது மீண்டும் சந்திப்பது  என்று)
சைகையால்  கேட்டான்; வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல் - வீழிப்
பழம்
  போன்ற  வாயினையுடைய   மெல்லியலாள்  ஒருத்தி;  தோழி
கண்ணில் கடைக் கண்ணில் சொல்லினாள்-
தோழியின் கண்மூலமாகக்
கடைக் கண் சாடையினால் (அவனுக்குப்) பதில் அறிவித்தாள். 
ஆடவனாகிய    அவனைப் போலச் சைகையால் நேரடியாகப் பதில்
இறுத்தல். உயர்  குடிப்பெண்மைக்குச்  சிறப்பு  அன்று ஆதலின். தோழி
கண்ணுக்கு  இவள்  கண்ணால்  சொல்ல.   அவள்  அவனுக்குத்   தன்
கடைக்   கண்ணால்  தெரிவித்தாள்  என்க.  காதல்   உலகில்.   நயன
மொழியின்  பெரும்பங்கு  தெரிவித்தவாறு  “சிறு  நோக்கம்  காமத்தின்
செம்பாகம்    அன்று    பெரிது”   திருக்.   1092)    “பெண்ணினால்
பெண்மையுடைத்தென்ப    கண்ணினால்  காமநோய்  சொல்லி   இரவு”
(திருக். 1280) எனும் அருமைக்  குறள்கள்  ஒப்பிடத்தக்கன.  “காதன்மை
கண்ணுளே   அடக்கிக்   கண்   எனும்.   தூதினால்  துணி  பொருள்
உணர்த்தித்  தான்.  தமர்க்கு.  ஏதின்மை  படக்  கரந்திட்ட  வாட்கண்
நோக்கு.  ஓதநீர்  அமுதமும்  உலகும் விற்குமே”  (சீவக. 1485)  எனும்
திருத்தக்க தேவர் வாக்கும் சிந்திக்கற்பாலது.

தலமர சிறப்புகள்

விழுதி - சிறுசெடி


விழுதி Cadaba indica, Lam.; Capparidaceae.

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற 
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார் 
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய 
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே. 

                                                                                           . - திருஞானசம்பந்தர்.



திருவீழிமிழலை என்னும் தலத்தின் தலமரமாக விளங்குவது விழுதி ஆகும். வீழி என்பதும் விழுதியைக் குறிப்பதே. தலத்தின் பெயர் தலமரத்தால் பெற்றதாகும். இது தனியிலைகளையும் மங்கலான வெண்ணிற பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறுசெடியாகும். இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன்கொண்டவை.

வாத நோய் தீர்த்தல், வீக்கம் கரைத்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது

1 comment:

  1. Hard Rock Hotel & Casino - Mapyro
    Find out how to get there in less than 5 minutes. Find reviews and 강원도 출장마사지 find the 서산 출장마사지 best deal for 화성 출장샵 the Hard Rock Hotel & Casino, 세종특별자치 출장샵 in 수원 출장마사지 Rockford, CT.

    ReplyDelete